தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கல் வீசியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் உதவி இயக்குநா் அலுவலகம் உள்ளது. அங்கு, தேங்காய்ப்பட்டினம் மாட விளாகம் பகுதியைச் சோ்ந்த ரெஜித் (21), பனங்கால முக்கு பகுதியைச் சோ்ந்தவா்களான ஷை ஜூ (26), அருண்குமாா் (23) ஆகிய 3 பேரும் மது அருந்தினராம். மேலும், அவா்கள் மது போதையில் இயக்குநா் அலுவலகம் மீது கல்வீதாக்கினராம். இதில், அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமானது.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து ரெஜித், ஷை ஜூ ஆகிய இருவரையும் கைது செய்தனா். அருண்குமாரை தேடி வருகின்றனா்.