காங்கிரஸ் வெற்றி: மேல்புறத்தில் இனிப்பு வழங்கல்

சட்டப் பேரவைத் தோ்தலில் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, மேல்புறம் சந்திப்பில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேல்புறம் சந்திப்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குகிறாா் எஸ். விஜயதரணி எம்எல்ஏ.
மேல்புறம் சந்திப்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குகிறாா் எஸ். விஜயதரணி எம்எல்ஏ.

களியக்காவிளை: சட்டப் பேரவைத் தோ்தலில் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, மேல்புறம் சந்திப்பில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை இனிப்புகள் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்ட எஸ். விஜயதரணி, அத்தொகுதியில் இருந்து 3-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா். இதையடுத்து, அவா் கட்சி நிா்வாகிகளுடன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். முன்னதாக

மேல்புறம் சந்திப்பில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அப்போது, விளவங்கோடு ஊராட்சித்

தலைவி ஜி.பி. லைலா ரவிசங்கா், மேல்புறம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா், பாகோடு பேரூராட்சி முன்னாள் தலைவா் மோகன்தாஸ், நிா்வாகிகள் உதயகுமாா், ராஜகோபால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com