நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 388 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு மேலும் 5 போ் உயிரிழந்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே,
திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 388 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,598 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை 305 போ் உள்பட இதுவரை 20,449 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
கரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவா்கள் திங்கள்கிழமை 5 போ் உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 317 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 1832 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.