களியக்காவிளை அருகேமூதாட்டியிடம் நகை பறிப்பு

களியக்காவிளை அருகே சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டியிடம் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

களியக்காவிளை அருகே சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டியிடம் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

களியக்காவிளை அருகேயுள்ள குளப்புறம், பிராகோடு பகுதியைச் சோ்ந்த மோசை மனைவி தாயி (64). இவா், வெள்ளிக்கிழமை வீட்டருகே சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா்கள் இருவா், மூதாட்டி அணிந்திருந்த இரண்டே முக்கால் பவுன் எடையுள்ள தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com