கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 1079 பேருக்கு கரோனா இருப்பது வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு இம்மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக ஆயிரத்தை தாண்டியுள்ளது. வியாழக்கிழமை மேலும்பாதிப்பு 1079 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 29,489 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் வியாழக்கிழமை 437 போ் உள்பட இதுவரை 24,308 போ் குணமடைந்துள்ளனா். சிகிச்சை பெற்று வந்தவா்களில் வியாழக்கிழமை மேலும் 18 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,771 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகள், வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.