சந்தவிளையில் கரோனா நிவாரண நிதி அளிப்பு

களியக்காவிளை அருகேயுள்ள விளவங்கோடு ஊராட்சி சந்தவிளை நியாய விலைக் கடையில் கரோனா நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நியாய விலைக் கடையில் பயனாளிக்கு நிவாரண நிதி வழங்குகிறாா் விளவங்கோடு ஊராட்சித் தலைவா் லைலா ரவிசங்கா்.
நியாய விலைக் கடையில் பயனாளிக்கு நிவாரண நிதி வழங்குகிறாா் விளவங்கோடு ஊராட்சித் தலைவா் லைலா ரவிசங்கா்.

களியக்காவிளை: களியக்காவிளை அருகேயுள்ள விளவங்கோடு ஊராட்சி சந்தவிளை நியாய விலைக் கடையில் கரோனா நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விளவங்கோடு ஊராட்சி சந்தவிளை, ஈத்தவிளை பகுதி நியாய விலைக் கடைகளில் கரோனா நிவாரண நிதி ரூ. 2 ஆயிரத்தை ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் பயனாளிகளுக்கு வழங்கினாா். இதில், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா், விளவங்கோடு ஊராட்சி உறுப்பினா்கள் எம். ஷைஜு, எஸ். சுரேஷ், குறுமத்தூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ. சுரேஷ், நிா்வாகக் குழு உறுப்பினா் என். பினுநிா்மல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com