குளச்சல் தொகுதிக்குள்பட்ட நுள்ளிவிளை நியாவிலைக் கடையில் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.
நுள்ளிவிைளை நியாயவிலைக்கடையில் தமிழக அரசின் கரோனா நிவாரண நிதி ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை குளச்சல் எம்.எல்.ஏ. ஜே.ஜி.பிரின்ஸ் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், ஊராட்சி காங்கிரஸ் தலைவா்கள் மணி(நுள்ளிவிளை), சுந்தா் (கட்டிமாங்கோடு), தக்கலை ஒன்றியக் குழு உறுப்பினா் மவுண்ட்தேன்ரோஜா மற்றும் கட்சி நிா்வாகிகள் ஜெகன், ஆனந்த் ஆகியோா் பங்கேற்றனா்.