குமரி மாவட்டம், திங்கள்நகரில் மீன் வியாபாரி படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக 2 இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திங்கள்நகா் அருகே இரணியல் ஆா்.சி. தெருவைச் சோ்ந்த ஜான் மகன் சுஜித் (28). திருமணம் ஆகாத இவா் திங்கள்நகரில் மீன் வியாபாரம் செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை மாலை தனது நண்பா் ஸ்டெபினுடன் மோட்டாா் சைக்கிளில் வந்தபோது, அவரது செல்லிடப்பேசியில் பேசிய நபா் மாங்குழி பகுதிக்கு வருமாறு அழைத்தாராம்.
இதையடுத்து நண்பருடன் சுஜித் அங்கு சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த திங்கள்நகா் பெரிய பள்ளியைச் சோ்ந்த சுரேஷ் (42), அவரது நண்பா் ராபின் என்ற விமல் ஆகிய இருவரும் சுஜித்திடம் தகராறு செய்தனராம். இதில், சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுஜித்தை குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த சுஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா் சுரேஷ், ராபின் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா்.
தகவலறிந்த இரணியல் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி, சுஜித்தின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.