குலசேகரம் காவல் நிலையத்தில் ஆய்வாளா் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், குலசேகரம் காவல் நிலையத்தில் ஆய்வாளருக்கு கடந்த 3 நாள்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டு அவா் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டாா். இதைத் தொடா்ந்து காவல் நிலையத்தில் 2 பெண் போலீஸாா் மற்றும் 5 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதையடுத்து காவல் நிலையம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.