குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மாா்த்தாண்டம் அருகே ரப்பா், வாழை தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. திக்குறிச்சி காஞ்சிவிளை பகுதியில் ராபி என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளை உள்பட அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது.