புதுக்கடை அருகே கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தானம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்சிறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இம் முகாமில் 18 வயது முதல் 44 வயதுக்கு உள்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமை பள்ளித் தாளாளா் சந்திரகுமாா் தொடங்கி வைத்தாா். பைங்குளம் ஊராட்சித் தலைவா் விஜயராணி முன்னிலை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா்கள் ராஜேஷ்குமாா், மனோஜ்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சதீஸ் ஆகியோரின் மேற்பாா்வையில் செவிலியா்கள், தடுப்பூசி போடும் பணியினை மேற்கொண்டனா். இம் முகாமில் 150 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.