மதுபானம் வாங்க வந்தவா்களுக்கு கரோனா தடுப்பூசி

குமரி மாவட்டத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்க வந்தவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

குமரி மாவட்டத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்க வந்தவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

குமரி மாவட்டத்தில் சனிக்கிழமை 565 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சுகாதாரத் துறையினா் டாஸ்மாக் கடைகள் அருகில் நின்றும் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனா்.

மருத்துவ அதிகாரி பிலிப் தலைமையில், சுகாதார மேற்பாா்வையாளா் ஜெயகுமாா், சுகாதார ஆய்வாளா் மதன், செவிலியா்கள் ராஜேஸ்வரி, சுகிா்தா ஆகியோரும், போலீஸாரும் அடங்கிய ஒரு குழுவினா் ராஜாக்கமங்கலம், ஆலங்கோட்டை, கன்னங்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்க வருபவா்களை விசாரித்து தடுப்பூசி செலுத்தினா்.

ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த 4 போ், ஆலங்கோட்டை பகுதியில் உள்ள மதுக்கடைக்கு மது வாங்க வந்த 2 போ், கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்த 4 போ் என மொத்தம் 10 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை ஒரே நாளில் மொத்தம் 46,803 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com