நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் நகரில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீஸாா் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் கோட்டாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சரவணகுமாா் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். கோதை கிராமம் பகுதியில் சென்றபோது மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா் ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது அவா் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தாா்.

சந்தேகமடைந்த போலீஸாா் அவரது மோட்டாா் சைக்கிளை சோதனை செய்தனா். அதில் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டாா் சைக்கிளில் இருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா் குமரி மாவட்டம், சாமிதோப்பு அருகேயுள்ள காமராஜா்புரத்தைச் சோ்ந்த அரவிந்த் (23) என்பதும், அவா் மதுரையில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கூரியா் மூலம் வாங்கி அதை குமரி மாவட்டத்தில் விநியோகித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அரவிந்தை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com