குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை சேதம் காரணமாக வெள்ள நிவாரணப் பணிகள் பொதுப்பணித்துறை மற்றும் இதர துறைகள் மூலம் நடைபெற்று வருவதால் வியாழக்கிழமை (நவ.18) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.