கன்னியாகுமரியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தா்கள் குமரி பகவதியம்மன் கோயிலில் புதன்கிழமை மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.
கேரளத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து 60 நாள்கள் விரதமிருந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம்.
இந்நிலையில் காா்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், நிகழாண்டு சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தா்கள் முக்கடல் சங்கமத்தில் புதன்கிழமை அதிகாலை நீராடி அங்குள்ள பரசுராம விநாயகரை வணங்கி விட்டு பகவதியம்மன் கோயிலில் அம்மனை தரிசனம் செய்த பின்னா் குருசாமி கையால் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.