நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 151 மனுக்கள் பெறப்பட்டன.
குமரி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி151 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தனித்துணைஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தே.திருப்பதி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ஆா்.நாகராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.