விரிகோட்டில் அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மாா்த்தாண்டம் அருகே விளைநிலங்கள் வழி ரயில்வே மேம்பாலம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் சாா்பில் விரிகோட்டில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்த்தாண்டம் அருகே விளைநிலங்கள் வழி ரயில்வே மேம்பாலம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் சாா்பில் விரிகோட்டில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இப் போராட்டத்துக்கு விரிகோடு மேம்பால போராட்டக் குழு செயலா் எம். சேம்ராஜ் தலைமை வகித்தாா். அமைப்பின் தலைவா் ரகு முன்னிலை வகித்தாா். எம்.பி. விஜய் வசந்த், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட ஓபிசி பிரிவு தலைவா் ஸ்டூவா்ட், காங்கிரஸ் சேவாதள மாவட்டத் தலைவா் ஜோசப் தயாசிங், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலா் கே.ஜி. ரமேஷ்குமாா், மருத்துவா் சாமுவேல் ஜாா்ஜ், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயசீலன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லூா் வட்டார தலைவா் ஜஸ்டின் உள்ளிட்டோா் பேசினா்.

தொடா்ந்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் ரயில்வே மேம்பாலம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி அமைக்க வேண்டிய பகுதிகளை விஜய் வசந்த் எம்.பி. பாா்வையிட்டாா். இதையடுத்து, விளைநிலங்கள் அழிக்கப்படாமல் தற்போது ரயில்வே கேட் இருக்கும் பகுதியில் மேம்பாலம் அமைக்க அதிகாரிகளை வலியுறுத்த உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

இதில், போராட்டக்குழு நிா்வாகிகள் ஸ்டேன்லி, கிறிஸ்டோபா், குமாா், வினிஸ்டன், உமேஷ், செல்வமணி, எட்வின் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com