கருங்கல் அருகே உள்ள ராமன்துறை மீனவா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை உலக மீனவா்தின விழா கொண்டாடப்பட்டது.
அகில இந்திய முன்னாள் மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்கள் ஜோா்தான் தலைமை வகித்தாா். ஜெசோ மேரி முன்னிலை வகித்தாா். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த், கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா் ஆகியோா் கேக்வெட்டி, கடலில் பால் ஊற்றினா். தொடா்ந்து, ஏழை மீனவா்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினா்.
இதில், தமிழக காங்கிரஸ் பொதுச் செயலா் ரமேஷ்குமாா், மருத்துவா் பினுலால், கிள்ளியூா் வட்டாரத் தலைவா் டென்னிஸ், ரெத்தினகுமாா், மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் ஜோபி, ரத்தீஸ், கேமல், ராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.