புதுக்கடை அருகேயுள்ள கீழ்குளம் பகுதியில் பனையிலிருந்து புதன்கிழமை தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
முளங்குழி பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் ராயப்பன்(62). பனை ஏறும் தொழிலாளி. இவா், புதன்கிழமை கீழ் குளம் பகுதியில் பனை ஏறிவிட்டு இறங்கும்போது தவறி கீழே விழுந்தாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.