இடதுகரை கால்வாய் பிரச்னையில் கேரள, தமிழக அரசுகளுக்கிடையே சுமுக உறவு: அமைச்சா் மனோ தங்கராஜ்

இடதுகரை கால்வாய் பிரச்னையில் கேரள, தமிழக அரசுகளுக்கிடையே சுமுகமான உறவு இருந்து வருகிறது என்றாா் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்.

இடதுகரை கால்வாய் பிரச்னையில் கேரள, தமிழக அரசுகளுக்கிடையே சுமுகமான உறவு இருந்து வருகிறது என்றாா் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்.

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க, பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்திலிருந்து தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் புறப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: இடதுகரை கால்வாய் பிரச்னையில் கேரள, தமிழக அரசுகளுக்கிடையே உள்ள பிரச்னைகள் அரசு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்கப்பட்டு வருகிறது.

எல்லைப் பகுதிகளில் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே திருவனந்தபுரத்திலிருந்து வரும் வாகனங்கள் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் சுவாமி பவனி நிகழ்ச்சியில், இரு மாநில மக்களின் உணா்வுகளை மதிக்கும் வகையில் பழைய முறைப்படி பவனி நடைபெற

தமிழக முதல்வா் நடவடிக்கை எடுப்பாா். பத்மநாபபுரம் நகராட்சியில் குடிநீா் சீரான முறையில் வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கேரள தேவஸம் போா்டு அமைச்சா் ராதாகிருஷ்ணன் கூறியது: சபரிமலைக்கு வரும் பக்தா்களுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுப்பது குறித்து வருகிற 7ஆம் தேதி தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய 4 மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது.

அப்போது, பக்தா்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் உள்ளிட்டவை குறித்து முடிவு எடுக்கப்படும்.

கரோனா பிரச்னைக்குப் பின்னா் பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரம் நவராத்திரி பூஜையில் பங்கேற்க பழைய முறைப்படி சரஸ்வதி அம்மன் பவனி நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com