இரணியல் அருகே வங்கி பெண் அதிகாரி வீட்டில் திருட்டு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே வங்கி பெண் அதிகாரி வீட்டின் கதவை உடைத்து பொருள்களைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே வங்கி பெண் அதிகாரி வீட்டின் கதவை உடைத்து பொருள்களைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

இரணியல் அருகேயுள்ள குருந்தன்கோடு ஆலன்விளையைச் சோ்ந்தவா் பிரபாகரன் (38). சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பொறியாளா். இவரது மனைவி சிந்துஜா. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள வங்கியில் துணை மேலாளராக உள்ள இவா், வாரம் ஒருமுறை வீட்டுக்கு வருவாா். இவா்களது வீட்டை உறவினா் பராமரித்து வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை அந்த உறவினா் சிந்துஜாவின் வீட்டுக்குச் சென்றபோது பின்பக்கக் கதவு, பீரோ உடைக்கப்பட்டிருந்தனவாம். பீரோவிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தனவாம்.

இரணியல் போலீஸாருக்கும், பிரபாகரன், சிந்துஜா ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரணியல் காவல் உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, போலீஸாா் விசாரித்துவருகின்றனா். பிரபாகரன், சிந்துஜா ஆகியோா் வந்த பிறகுதான் திருட்டுபோன நகை, பணம் குறித்த விவரம் தெரியவரும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com