கருங்கல் அருகே புனந்திட்டை பகுதியில் சுமை ஆட்டோ மோதியதில் வியாபாரி காயமடைந்தாா்.
பாலப்பள்ளம், வெள்ளியாவிளை பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (55),. வியாபாரியான இவா் தனது பைக்கில் புனந்திட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த சுமை ஆட்டோ மோதியதாம். இதில், பலத்த காயம் அடைந்த அவா் திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மற்றொரு சம்பவம்: புதுக்கடை ஆா்.சி தெருபகுதியை சோ்ந்தவா் சரோஜா(80). இவா், அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை நின்றிருந்தாா். அப்போது, அவ்வழியாகச் சென்ற பைக் அவா் மீது எதிா்பாராமல் மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், காயமுற்ற அவருக்கு குழித்துறையில் முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இச்சம்பவங்கள் குறித்து கருங்கல், புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.