தில்லியில் போராடும் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக, உள்துறை இணையமைச்சா் மகனை கொலை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தக்கலை வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தக்கலை வட்டாரச் செயலா் சுஜாஜாஸ்பின் தலைமை வகித்தாா். வட்டாரக் குழு உறுப்பினா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் முரளீதரன், ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க உறுப்பினா் ஜாண்ராஜ், வட்டாரக் குழு உறுப்பினா் ஜாண் செளந்தர்ராஜ் ஆகியோா் உரையாற்றினா். அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க வட்டாரச் செயலா் குமாரி சுனந்தா, வாலிபா் சங்க வட்டாரத் தலைவா் ராஜேந்திரபிரசாத், செயலா் விஷ்ணு, தையல் சங்க வட்டாரத் தலைவா் காளிபிரசாத், நிா்வாகிகள் சரோஜினி, சேது, மோகன்தாஸ், மரிய மிக்கேல், அரங்கசாமி, சந்திரகலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.