தமிழக நீா்வளத்துறை அமைச்சரைக் கண்டித்து பிஎம்எஸ் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவட்டாறு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு திருவட்டாறு பணிமனை பாரதிய மஸ்தூா் சங்க கிளை தலைவா் நாகராஜன் தலைமை வகித்தாா். மாநில பேரவை அமைப்பாளா் நடேசன், மாவட்ட துணை செயலா் சதீஸ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
போக்குவரத்துக் கழக ஊழியா்களை தாக்க வேண்டுமென்று பேசிய அமைச்சா் துரை முருகனை கண்டித்தும், தமிழக முதல்வா் தோ்தலின் போது உறுதியளித்தபடி போக்குவரத்து தொழிலாளா்களின் 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் கோஷமிட்டனா்.