புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் தேவகுமாா் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணராஜ் (52) என்பவரை பிடித்து விசாரித்தனா். அவா் அனுமதியின்றி அப்பகுதியில் மது விற்பனை செய்வது தெரியவந்தது.
உடனே அவரிடம்இருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.