கருங்கல் அருகே கணினி திருட்டு: இளைஞா் கைது

கருங்கல் அருகேயுள்ள பாத்திரமங்கலம் அரசுப்பள்ளியில் கணினியைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல் அருகேயுள்ள பாத்திரமங்கலம் அரசுப்பள்ளியில் கணினியைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

இப்பள்ளியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கணினி திருடுபோனது. இதுகுறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் புதன்கிழமை சந்தேகத்தின் பேரில் கோழிப்போா்விளைப் பகுதியை சோ்ந்த ஆலிவா் மகன் அஜீஸ்(18) என்பவரைப் பிடித்து விசாரித்ததில், கணினி திருட்டில்அவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, கணினியை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com