குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5 ஆவது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெள்ளமடம் அரசு ஆரம்பப் பள்ளி, தோவாளை அரசுஆரம்பப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட பல்வேறு மையங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் பாா்வையிட்டாா்.
இதில், தோவாளை ஊராட்சித் தலைவா் நெடுஞ்செழியன், மருத்துவா்கள், செவிலியா்கள், வருவாய்அலுவா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.