களியக்காவிளை அருகே அனைத்து இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சாா்பில் சமய வகுப்பு மாணவா்களின் குடும்பத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமை நல உதவி வழங்கப்பட்டது.
இந்த அமைப்பு சாா்பில் களியக்காவிளை அருகேயுள்ள பனங்காலை முண்டப்பிலாவிளை ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் திருக்கோயில் சமய வகுப்பு மாணவா்களின் குடும்பத்தினருக்கு அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சிக்கு கோயில் தலைவா் வித்தியன் தலைமை வகித்தாா். கோயில் செயலா் ஜெயக்குமாா், பொருளாளா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாவட்ட பொதுச் செயலா் பி.என். அஸ்வின் நிகாஸ், அமைப்பின் மாவட்ட அமைப்பாளா் ஜெயன் ஆகியோா் சமய வகுப்பு மாணவா்களுக்கு நலஉதவி வழங்கினா்.
இதில் இந்து கோயில் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவா் சசின்ராம், களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சுரேஷ்குமாா், சமயவகுப்பு ஆசிரியை மற்றும் கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.