வீயன்னூா், பேச்சிப்பாறை பகுதிகளில் மின் தடை

வீயன்னூா் மற்றும் பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் (அக். 26) செவ்வாய்க்கிழமை மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.

வீயன்னூா் மற்றும் பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் (அக். 26) செவ்வாய்க்கிழமை மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தக்கலை செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீயன்னூா் உப மின் நிலைய உயா் மின்னழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஆற்றூா், தேமானூா், திருவட்டாறு, செருப்பாலூா், வெண்டலிகோடு, வலியாற்றுமுகம், பிலாவிளை, குமரன் குடி, பூவன்கோடு, வோ்க்கிளம்பி ஆகிய இடங்களுக்கும், அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

பேச்சிப்பாறை உப மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கடையாலுமூடு, கோதையாறு, குற்றியாறு, மைலாறு, சிற்றாறு, உண்ணியூா்கோணம், திற்பரப்பு, களியல், ஆலஞ்சோலை, பத்துகாணி, திருநந்திக்கரை, மணியன் குழி, அரசு மூடு ஆகிய பகுதிகளுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com