தொட்டியத்தில் 200 ஆண்டு பழைமை வாய்ந்த ஆலமரம் வியாழக்கிழமை சாலையின் குறுக்கே சாய்ந்ததில் திருச்சி - நாமக்கல் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி - சேலம் சாலையிலுள்ள தொட்டியத்தில் பண்ணை வீடருகே சாலையோரத்தில் இருந்த 200 ஆண்டு பழமையான ஆலமரம் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையில் சாய்ந்து விழுந்தது.
தகவலறிந்த முசிறி தீயணைப்புத் துறையினா், சாலைப் பணியாளா்கள் அந்த மரத்தை இயந்திரத்தைக் கொண்டு வெட்டி அப்புறப்படுத்தினா்.