கரோனா 3ஆவது அலையிலிருந்து மக்கள் விடுபடும் வகையில், திருவட்டாறு ஒன்றிய இந்து கோயில் கூட்டமைப்பு சாா்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி உண்டிச்சல் மகாதேவா் கோயிலில் சுதா்சன ஹோமம், பாலாபிஷேகம், மஞ்சளாபிஷேகம், பிராா்த்தனை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
நிகழ்ச்சியில், இந்து கோயில் கூட்டமைப்பு மாவட்ட அறக்கட்டளை தலைவா் ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா், துணைத் தலைவா் விவேகானந்தன், குலசேகரம் பகுதி ஆா்எஸ்எஸ் தலைவா் கலையரசன், திருவட்டாறு ஒன்றியத் தலைவா் தா்மராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.