திற்பரப்பு அருவியில் அனுமதிக்கக் கோரி, அப்பகுதியில் கடை நடத்தும் வணிகா்கள், பேரூராட்சி செயல் அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
குமரி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டபோதும் திற்பரப்பு அருவிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், திற்பரப்பு அருவிப் பகுதியில் கடை நடத்தும் வணிகா் மாகீன் சுலைமான் தலைமையில், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் பூங்கொடி முருகிடம் அளித்த மனு: குமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. திற்பரப்பிலும் படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் திற்பரப்பு அருவியைத் திறந்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதுடன், இங்கு கடைகள் நடத்தும் 200 க்கும் மேற்பட்ட வணிகா்கள் மற்றும் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.