களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம், இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இம் முகாமை கல்லூரிச் செயலா் எம். எக்கா்மென்ஸ் மைக்கேல் தொடங்கி வைத்தாா். இடைக்கோடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் துவனி தலைமையில் செவிலியா் சுலோஜனா மற்றும் மருத்துவக் குழுவினா் களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினா்.
இதில், களியக்காவிளை நகா்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் பிரசாந்த், சுகாதார ஆய்வாளா்கள் ஸ்ரீகுமாா், அகில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ஆா். கிருஷ்ணபிரசாத் மற்றும் என்எஸ்எஸ் மாணவா்கள் செய்திருந்தனா்.