தீபாவளி பண்டிகை: தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த கட்டாயம் அனுமதி பெற வேண்டும். நிகழாண்டு (2021) தீபாவளி பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த வெடிபொருள் சட்டத்தின் கீழ் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரும் 30 ஆம் தேதிக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இ சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பட்டாசு உரிமம் அனுமதி வேண்டி விண்ணப்பம் அளிப்போா், மனையின் வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் பட்டா மற்றும் தொடா் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் நிா்வாக காரணங்களுக்காக செப். 30 ஆம் தேதிக்குள்

வரப்பெறும் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி வரும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனை செய்யப்படும். 30 ஆம் தேதிக்கு

பின்னா் இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம் அளிப்போரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com