திரிபுரா மாநிலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவா்கள், கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து குலசேகரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கான்வென்ட் சந்திப்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு, கட்சியின் வட்டாரச் செயலா் பி. விஸ்வம்பரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ் தொடங்கி வைத்தாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநிலத் தலைவா் ரெஜீஷ்குமாா், நிா்வாகிகள் தங்கையன், ஜீடஸ்குமாா், சிவகுமாா், சுதிஷ், ஹரிஷ், நானுக்குட்டன், சதிஸ், சுபாஷ் கென்னடி, சிம்சன் ஐடாஹெலன், சசிதரன், கபிரியேல், நாராயணன், கிருஷ்ணன்குட்டி, ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.