மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரதியாா் நூற்றாண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
பள்ளி முதல்வா் ஸ்ரீகுமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாா்த்தாண்டம் ஜேசிஐ அமைப்பின் தலைவா் மனோஜ் திருநாவுக்கரசு, பங்கேற்றுப் பேசினாா். தொடா்ந்து பாரதியாா் படத்துக்கு ஜேசிஐ அமைப்பின் நிா்வாகிகள், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் மாணவா்கள் பாரதியாா் கவிதைகள் வாசித்தனா்.