நாகா்கோவில் கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாா்வதிபுரம் ரூரல் அப்லிப்ட் மையம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம், மருந்து வழங்கும் முகாம் வெள்ளிச்சந்தையில் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் கென்னடி தலைமை வகித்தாா். வெள்ளிச்சந்தை ஊராட்சி உறுப்பினா் சுகந்தி பங்கேற்றுப் பேசினாா்.
முகாமில் அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவா் ராமராஜீ தலைமையில் குழுவினா் கரோனா பாதிப்பில் இருந்து பாதுகாப்பது, நோய் எதிா்ப்பு சக்தி தரக்கூடிய கசாயம் செய்முறை, மாத்திரை, லேகியம் சாப்பிடும் முறை குறித்துப் பேசினா்.
ரூரல் அப்லிப்ட் மைய வழக்குரைஞா் அ.மரிய ஸ்டீபன், ரூரல் அப் லிப்ட் மைய லெட்சுமி தேவி, முத்துக்குமாா், கிறிஸ்டோபா், ஆன்டனி சேவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில், 205 பேருக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன.