களியக்காவிளை: களியக்காவிளை அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
களியக்காவிளை அருகேயுள்ள அதங்கோடு, காக்கதூக்கி பகுதியைச் சோ்ந்தவா் முத்தையன் (80). இவா் படந்தாலுமூட்டிலிருந்து காமராஜ்நகா் திருப்பு வழியாக வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, கொல்லங்கோட்டிலிருந்து மாா்த்தாண்டம் நோக்கி வந்த அரசுப் பேருந்து அவா் மீது எதிா்பாராமல் மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த களியக்காவிளை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.