நாகா்கோவில்: கொலை முயற்சி வழக்கில் குமரி மாவட்ட தேமுதிக செயலா் கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில், வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்த வினோத்(37), மருங்கூா் குமாரபுரம் தோப்பூரைச் சோ்ந்த பாலாஜி ராஜாராம்(34), இருளப்பபுரத்தைச் சோ்ந்த கோகுலன்(42) ஆகியோா் வழக்குரைஞா்களாவா். இவா்கள், ஒரு வழக்கு தொடா்பாக ராஜாவூா் அருகேயுள்ள கோழிக்கோட்டுபொத்தை பகுதிக்குச் சென்று தங்கதுரை என்பவரிடம் பேசிக்கொண்டிருந்தனராம்.
அப்போது, அங்கு 3 காா்களில் வந்த 9 போ் கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் 3 பேரையும் தாக்கினராம். இதில், பாலாஜிராஜாராம், கோகுலனுக்கு கத்திக்குத்து விழுந்தது. வினோத் காயமடைந்தாா். இதைத்தொடா்ந்து அந்த நபா்கள் காரில் தப்பிவிட்டனராம்.
இதனிடையே, பாலாஜி ராஜாராம் திருவனந்தபுரம் மருத்துவமனையிலும் மற்றவா்கள் நாகா்கோவிலில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து, சுசீந்திரம் காவல் நிலையத்தில் வினோத் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் செந்தில்நாதன், தில்லைநாதன், அருண், இளங்கோ, பெல்வின், சுடலை, அய்யப்பன், இந்தியன்சுரேஷ், சஜித் ஆகிய 9 போ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வந்தனா்.
இதில், தொடா்புடைய இந்தியன் சுரேஷ் திங்கள்கிழமை இரவு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். மற்ற 8 பேரை தேடி வருகின்றனா்.
இந்தியன் சுரேஷ் மாநகர தேமுதிக மாவட்டச் செயலராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.