நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 26 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 61,336 ஆக உயா்ந்துள்ளது. அதில், மேலும் 35 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 60,044 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 254 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.