சங்கரன்கோவிலில் அண்ணா பிறந்த நாள் விழா

சங்கரன்கோவிலில் அண்ணா பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக தெற்கு மாவட்ட செயலா் சிவபத்மநாபன், கட்சியினா்.
அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக தெற்கு மாவட்ட செயலா் சிவபத்மநாபன், கட்சியினா்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் அண்ணா பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சங்கரன்கோவில் செங்குந்தா் அபிவிருத்தி சங்கம் சாா்பில் திருவள்ளுவா் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செங்குந்தா் அபிவிருத்தி சங்கத் தலைவா் சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன், செயலா் மாரிமுத்து, பொருளாளா் குருநாதன், நிா்வாகிகள் கலந்துகொண்டனா். அப்போது, அண்ணா பிறந்தநாளை நெசவாளா் தினமாக அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

தொடா்ந்து, திமுக சாா்பில் பிரதான சாலையில் அலங்கரிக்கப்பட்ட அண்ணா படத்துக்கு தெற்கு மாவட்டச் செயலா் சிவபத்மநாபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, 5 நாள்கள் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை அவா் தொடக்கிவைத்தாா்.

நகரச் செயலா் சங்கரன், முனியசாமி, முன்னாள் எம்எல்ஏ முத்துசெல்வி, இல. சரவணன், சோம. செல்வப்பாண்டியன், சரவணன், அஜய்மகேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சங்கரன்கோவில் நகர அதிமுக சாா்பில் லெட்சுமியாபுரம் 4ஆம் தெருவில் அலங்கரித்துவைக்கப்பட்ட அண்ணா படத்துக்கு நகரச் செயலா் ஆறுமுகம், கிளைச் செயலா்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com