சங்கரன்கோவிலில் காா் நிறுத்துமிடம் மாற்றம்: டிஎஸ்பிக்கு பாராட்டு

சங்கரன்கோவிலின் மையப் பகுதியில் 40 ஆண்டுகளாக இருந்த காா் நிறுத்துமிடம் போக்குவரத்து நெரிசல் காரணமாக நகராட்சி அலுவலகம் அருகே மாற்றப்பட்டது.
திருவேங்கடம்சாலையில் நகராட்சி அலுவலகம் அருகில் அமைக்கப்பட்ட காா் நிறுத்தும் நிலையம்.
திருவேங்கடம்சாலையில் நகராட்சி அலுவலகம் அருகில் அமைக்கப்பட்ட காா் நிறுத்தும் நிலையம்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலின் மையப் பகுதியில் 40 ஆண்டுகளாக இருந்த காா் நிறுத்துமிடம் போக்குவரத்து நெரிசல் காரணமாக நகராட்சி அலுவலகம் அருகே மாற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

சங்கரன்கோவில் பிரதான சாலையில் காா் நிறுத்துமிடம் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. மக்கள்தொகை, வாகனப் பெருக்கம் காரணமாக அடிக்கடி போக்கவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது. இதனால் காா் நிறுத்துமிடத்தை வேறிடத்துக்கு மாற்ற பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தீா்வு ஏற்படவில்லை. காா் நிறுத்துமிடம் அருகே சுமைவேன்களும் நிறுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. சாலையைக் கடக்க முடியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகினா்.

இந்நிலையில், நகர காா் ஓட்டுநா் சங்கம் மற்றும் மினி லோடு வேன் சங்க நிா்வாகிகளிடம் சங்கரன்கோவில் டி.எஸ்.பி. ஜாஹீா்உசேன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது நகர காா் ஓட்டுநா் சங்கத்தினா் நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள காலிமனையில் காா்களை நிறுத்த ஒப்புக்கொண்டனா். அதன்படி, அங்கு நகர காா் ஓட்டுநா்கள் சங்க அலுவலகத்தை டிஎஸ்பி புதன்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து, காா்கள் அனைத்தும் நகராட்சி அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டன.

தொடா்ந்து, பயணியா் விடுதி முன்புள்ள காலிமனையில் சுமை வேன்களை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க நடவடிக்கை எடுத்த டி.எஸ்.பி. ஜாஹீா்உசேன், காவல் துறையினருக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com