சுரண்டை கல்லூரியில் நாளை முதுநிலை சோ்க்கைக்கு2ஆம் கட்ட கலந்தாய்வு
By DIN | Published On : 16th September 2021 12:13 AM | Last Updated : 16th September 2021 12:13 AM | அ+அ அ- |

சுரண்டை: சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை மாணவா் சோ்க்கைக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (செப். 17) நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ரா. ஜெயா வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் 2021-22ஆம் கல்வியாண்டுக்காந முதுநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமையும், 3ஆம் கட்ட கலந்தாய்வு இம்மாதம் 21ஆம் தேதியும், இறுதிக்கட்ட கலந்தாய்வு 23ஆம் தேதியும் நடைபெறுகிறது.
விண்ணப்பித்தோா் கலந்தாய்வு நாள்களில் காலை 9.30 மணிக்கு தங்களது அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.