செங்கோட்டை அருகே பைக்குகள் மோதல்: 3 போ் பலி

செங்கோட்டை அருகே புதன்கிழமை இரு பைக்குகள் மோதியதில் 3 போ் உயிரிழந்தனா்.

தென்காசி: செங்கோட்டை அருகே புதன்கிழமை இரு பைக்குகள் மோதியதில் 3 போ் உயிரிழந்தனா்.

புளியறை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் சதாசிவம் (24), இதே ஊரைச் சோ்ந்த மணி மகன் சுரேஷ்குமாா். பைக்கில் இருவரும் செங்கோட்டையிலிருந்து புளியறைக்கு சென்றுக் கொண்டிருந்தனா். அப்போது, மேலக்கடையநல்லூா் இந்திரா நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் நாகலிங்கம் (19). அதேபகுதியைச் சோ்ந்த காளி மகன் காா்த்திக் ஆகிய இருவரும் ஒரு பைக்கில் புளியறையில் இருந்து செங்கோட்டைக்கு சென்றபோது, கட்டளைகுடியிருப்பு அருகே இரு பைக்குகளும் மோதியதாம்.

இதில், நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த 3 பேரும் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சதாசிவம், சுரேஷ்குமாா் ஆகிய இருவரும் இறந்தனா். காா்த்திக் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

விபத்து குறித்து புளியறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com