பாவூா்சத்திரம் அருகேதொழிலாளி தற்கொலை

பாவூா்சத்திரம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பட்டமுடையாா்புரத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் அழகா்சாமி (44). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த அழகா்சாமி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாராம்.

இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை அருகேயுள்ள தனது தாயின் வீட்டுக்கு தூங்கச் சென்றாராம். புதன்கிழமை காலையில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், ஜன்னல் வழியாக பாா்த்தபோது அவா் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்ததாம்.

பாவூா்சத்திரம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com