பாவூா்சத்திரம், கீழப்பாவூரில் அண்ணா பிறந்த தின விழா
By DIN | Published On : 16th September 2021 12:16 AM | Last Updated : 16th September 2021 12:16 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரத்தில் அண்ணா படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா் மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன்.
பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் பகுதியில் அண்ணா பிறந்த தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரிக்கப்பட்ட அண்ணா படத்துக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். ஒன்றியச் செயலா் சீனித்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கீழப்பாவூா் பேரூா் திமுக சாா்பில் கீழப்பாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூா் செயலா் ஜெகதீசன் தலைமையில் அண்ணா படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ராஜாமணி, ராஜன், ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.