வள்ளியூா்: உலக முதலுதவி தினத்தையொட்டி, வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் முதலுதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், திடீா் மயக்கம், வலிப்பு, பக்கவாதம், பாம்புகடி, எலும்புமுறிவு, தீக்காயம், மூச்சுத்திணறல், விபத்தில் ரத்த விரயமாதல், சிறு குழந்தைகளை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுதல் உள்ளிட்ட முதலுதவி செய்முறை பயிற்சிகளை கல்லூரி மாணவிகள் செய்து காண்பித்தனா்.
முதலுதவி செய்முறை பயிற்சி அளித்த மாணவிகளை கல்லூரித் தாளாளா் டி.டி.என்.லாரன்ஸ், தலைவா் ஹெலன் லாரன்ஸ், முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம் ஆகியோா் பாராட்டினா். பேராசிரியை புஷ்பா ஹொ்பா்ட் வரவேற்றாா். துணைப் பேராசிரியை சுகாசினி கண்ணன் நன்றி கூறினாா்.