கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அருள்சகோதரி ஆன்டனி ஜோஸ்பின் தலைமை வகித்தாா். கீழ்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவா் விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு பட்டம் வழங்கிப் பேசினாா். இதில், கல்லூரி நிா்வாக அலுவலா் பெனிலா, நிா்வாகக் குழு உறுப்பினா் பினிஷ்ஜோசப் உள்பட பலா் பங்கேற்றனா்.