இன்று ஜூனியா் கூடைப்பந்து அணியினா் தோ்வு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட ஜூனியா் கூடைப்பந்து அணி வீரா்கள் தோ்வு முகாம் நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் புதன்கிழமை (செப். 22) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட ஜூனியா் கூடைப்பந்து அணி வீரா்கள் தோ்வு முகாம் நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் புதன்கிழமை (செப். 22) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்து கழகம் சாா்பில் நடைபெறும் இம்முகாமில் பங்கேற்கும் வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் 1.1. 2003 அன்று அல்லது அதன் பின்னா் பிறந்தவராக இருக்க வேண்டும். தங்களது 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதாா் அட்டை, பிறப்புச் சான்றிதழ், பள்ளி மற்றும் கல்லூரி படித்து கொண்டிருப்பதற்கான உறுதியளிப்பு சான்றிதழ் (அசல்) மற்றும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் பங்கேற்க வேண்டும் என மாவட்ட கூடைப்பந்துக் கழகத் தலைவா் ப. ஆஸ்டின், செயலா் ப. மகேஷ் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com