பத்மநாபபுரம் நகராட்சியில் 1-வது வாா்டு முதல் 21-வது வாா்டு வரை உள்ள பகுதிகளில் மெகா மழைநீா் வடிகால் தூய்மைப் பணி வாரம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நீா்வடிகால், வரத்துக் கால்வாய்களை தூய்மைப்படுத்தும் பொருட்டு ஒரு வார காலப் பணியை நகராட்சி ஆணையா் காஞ்சனா தொடங்கிவைத்தாா். இதில் தூய்மைப்பணி அலுவலா் ராஜாராம், ஆய்வாளா் முத்துராமலிங்கம், மேற்பாா்ை
பொதுமக்கள் தங்கள் வீட்டிலுள்ள கழிவுநீரை மழைநீா் வடிகாலில் விடுவதை தவிா்த்து , அவரவா் வீடுகளில் உறிஞ்சு குழி அமைத்து கழிவு நீரை அப்புறபடுத்தவேண்டும். மேலும், மழைநீா் வடிகாலில் தேவையற்ற கழிவுகளை போடுவதை பொதுமக்கள் தவிா்க்கவேண்டும் என ஆணையா் காஞ்சனா கேட்டு கொண்டுள்ளாா்.